சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மற்றும் லாரி ஸ்ட்ரைக்கால் காய்கறிகளின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் காய்கறிச் செடிகள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதையடுத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட மார்கெட்டுகளுக்கு வரும் காயகற்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 750 லாரிகளில் காய்கறிகள் வரும. தற்போது 300 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால் காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் பல பகுதிகளிலிருந்து வரவேண்டிய லாரிகள் கடந்த சில தினங்களாக ஸ்ட்ரைக்கில் இறங்கிவிட்டன. இதனாலும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Read also- பாதுகாப்பான மொபைல் பேங்கிங்... இதோ உங்களுக்கு அவசியமான 12 குறிப்புகள்!
- 24 மணி நேரத்தில் 2 மில்லியன் ஐபோன்களுக்கு ஆர்டர் - புதிய சாதனை!!
- ஆக 21ந் தேதி முதல் மீண்டும் மானேசர் ஆலையில் உற்பத்தி - மாருதி அறிவிப்பு
- மாருதி வன்முறை எதிரொலி... பங்குகள் விலை 5% சரிந்தது
- வரலாறு காணாத சரிவில் கிங்பிஷர் பங்குகள் - முக மதிப்பை விட குறைந்தது!
